கஞ்சா வழக்கு; சவுக்கு சங்கரை விசாரித்த நீதிமன்றம்!

published 9 months ago

கஞ்சா வழக்கு; சவுக்கு சங்கரை விசாரித்த நீதிமன்றம்!

கோவை: கோவை சிறையில் இருந்த யூடியூபர் சங்கர் மதுரை கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்

யூடியூபரான சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேனி விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்து  ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திலும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கரை இன்று காலை 7.20 மணிக்கு மதுரை போலீசார் வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இன்று பிற்பகலில் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி, இரண்டு நாட்கள் அவருக்கு போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe