வாக்குகளை எப்படி எண்ண வேண்டும்? கோவையில் பயிற்சி முகாம்..

published 8 months ago

வாக்குகளை எப்படி எண்ண வேண்டும்? கோவையில் பயிற்சி முகாம்..

கோவை: கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் வாக்குகளை எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

 

கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் வரும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

இதில், கோவை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை தடாகம் ரோடு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வாக்குகளை எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் இன்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், வாக்கு எண்ணும் பணியில் நுண்பார்வையாளர்கள் 344 பேர் பங்கேற்றனர்.

அவர்களுக்கு அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்த கையேடு வழங்கி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe