பீளமேட்டில் விதிமுறை மீறி மது சப்ளை- தனியார் பார் மூடல்…

published 8 months ago

பீளமேட்டில் விதிமுறை மீறி மது சப்ளை- தனியார் பார் மூடல்…

கோவை: கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் தனியார் ஓட்டலில் எப்.எல் 2 உரிமம் பெற்ற பார் உள்ளது. இந்த பார் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

ஆனால் விதிமுறை மீறி காலை 10.30 மணிக்கு பார் திறக்கப்பட்டு மதுபானம் சப்ளை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக புகார் வந்தது.

பீளமேடு போலீசார் புகாரின் பேரில் பாரில் சோதனை செய்தனர். இதில் முறைகேடாக நேர விதிகளை மீறி மதுபானம் வழங்கியதாக ஊட்டியை சேர்ந்த பார் மேலாளர் சுரேஷ் பாபு (49) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பார் உரிமையாளர் மகேந்திரனை தேடி வருகின்றனர்.

பார் மூடி சீல் வைக்கப்பட்டது. பாரில் இருந்த 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சொகுசு ஓட்டலில் மதுபானம் வழங்கும் நேரத்தை சரியாக கடை பிடிக்க வேண்டும். மதுபானம் விற்பனை நேரம் மீறக்கூடாது என போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe