காருக்கு வழிவிடுவதில் தகாரறு- அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்திய 5 பேருக்கு வலை…

published 8 months ago

காருக்கு வழிவிடுவதில் தகாரறு- அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்திய  5 பேருக்கு வலை…

கோவை: காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்தி தப்பிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரை சேர்ந்தவர் தீபக் வில்சன் (41). அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் பொன்நிலவன் என்பவருடன் பைக்கில் கணுவாயில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். 

டிவிஎஸ் நகர் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களை முந்தி செல்ல முயன்றது. இதில் வழிவிடுவதில், காரில் வந்தவர்களுக்கும், தீபக் வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கி வந்த 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசி தீபக் வில்சனை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். 

இதுகுறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe