கோவையில் குப்பை கொட்டியவர் மீது வழக்கு…

published 8 months ago

கோவையில் குப்பை கொட்டியவர் மீது வழக்கு…

கோவை: கோவை, வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேர்முட்டி, ராஜா தெரு பகுதியில் சிலர் ஆட்டுஇறைச்சி மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதாக கூறப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதாக புகார்கள். இதுகுறித்து சிலர் கழிவு இறைச்சிகள் கொட்டப்பட்டு கிடப்பதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் இறைச்சி கழிவுகளை கட்டுபவர்களை கண்டுபிடிக்க பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது காந்தி பார்க்கில் ஹோட்டல் வைத்திருக்கும் நபரின் சகோதரர் முகமது பைஸிப், மோட்டார் சைக்கிளில் வந்து கொட்டிசெல்வது தெரியவந்தது. தொடர்ந்து கண்காணித்தபோது அவரது சகோதரர் முகமது ஆயாஸ் வயது 41) என்பவரும் கழிவுகளைகொட்ட வந்ததை சப் இன்ஸ்பெக்டர்தியாகராஜ் கண்டுபிடித்தார்.


இதைத் தொடர்ந்து ஹோட்டல் அதிபர் முகமது அயாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe