கோவை சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்...

published 8 months ago

கோவை சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்...

கோவை: கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 

இங்கு அடிக்கடி போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, சிறைக்குள் போதைப்பொருள் பயன்பாடு உள்ளதா? செல்போன் உபயோகப்படுத்துகின்றனரா? என போலீசார் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சிறைக்குள் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். 

அதில், வால்மேடு பிளாக்கில் உள்ள 3வது அறையில் கைதி ஒருவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் தண்டனை கைதியான கோவையை சேர்ந்த ரஹீம்(32) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் சரவணகுமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe