கோவையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்!

published 8 months ago

கோவையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்!

கோவை: திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 21ம் தேதி கோவையில் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இந்த சிறப்பு முகாமை திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe