கோவையில் வீட்டிற்கு தீ வைத்த கணவர் கைது!

published 8 months ago

கோவையில் வீட்டிற்கு தீ வைத்த கணவர் கைது!

கோவை: கோவை ஆர்.எஸ் புரம், தடாகம் ரோடு மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (60). ஆட்டோ டிரைவர்.

இவரது மகளுக்கும் வேடப்பட்டி நம்பியாழன் குளம் விடிஎஸ் நகரை சேர்ந்த மதன்ராஜ் (34) என்பவருக்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 17ம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து மதன்ராஜ் மீது அவரது மனைவி தொண்டாமுத்தூர் போலீசில்
புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மதன்ராஜூடன் தனக்கு வாழ விருப்பமில்லை. குடும்ப நல நீதிமன்றம் மூலம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர போவதாகவும் அவர் மனைவி கூறினார். மேலும் போலீசாரிடம் இதை கடிதமாக எழுதி கொடுத்துவிட்டு மதன்ராஜ் மனைவி சென்றுவிட்டார்.

இதனால் மதன் ராஜிக்கு அவர் மனைவி மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு தடாகம் மீனாட்சி நகரில் 2வது தெருவில் உள்ள உள்ள மாமனார் ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற மதன்ராஜ் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கதவில் எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டு முன்பு கிடந்த செருப்புகள், வீட்டு முன்பக்க கதவு ஆகியவை தீயில் சேதமடைந்தது.

இது குறித்து ராதாகிருஷ்ணன் ஆர் எஸ் புரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதன் ராஜை கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe