கோவையில் பாடைகட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது...

published 7 months ago

கோவையில் பாடைகட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது...

கோவை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து கோவை காந்திபுரம் வி.கே.கே.மெனன் ரோட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பாஜகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சாராய பாக்கெட் மாதிரிகளை பெண்கள் மாலையாக அணிந்தும், பாடை கட்டியும் நூதனமாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். போலீசாரின் அனுமதி இன்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின்  போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe