மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தின் பெயர் மாற்ற நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

published 7 months ago

மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தின் பெயர் மாற்ற நடவடிக்கைகளை கண்டித்து கோவையில்  வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

கோவை: இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் புரோசிஜர் கோர்டு, மற்றும் இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை அண்மையில் சமஸ்கிருததில் மாற்றியுள்ளனர். இந்த பெயர்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்களை மாற்றி பாசிச வடிவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், பல்வேறு எதிர்ப்புகளை மீறியே இதனை ஒன்றிய அமல்படுத்துவதை வன்மையாக கண்டிக்க தக்கது என்றனர்.  

தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள் உடனடியாக இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe