மறைமுக தேர்தல்; கோவையின் இரண்டாவது பெண் மேயரானார் ரங்கநாயகி

published 6 months ago

மறைமுக தேர்தல்; கோவையின் இரண்டாவது பெண் மேயரானார் ரங்கநாயகி

கோவை: கோவை மாநகராட்சிக்கான மறைமுக தேர்தலில் ரங்கநாயகி வெற்றி பெற்றார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகரில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றது. கோவையில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகள் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.

அப்போதைய பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில் கல்பனா ஆனந்தகுமார் கோவையின் முதல் பெண் மேயரானார். முன்னதாக சென்னைக்கு பேருந்தில் சென்று தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் பதவி ஏற்றது முதல் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் கல்பனா மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக அமைச்சர் கே.என்.நேருவிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே அவர் கடந்த மாதம் 3ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

கோவை முனிசிபல் கார்பரேசன் விதி 1981, பிரிவு 37ன் படி, மேயர் கொடுத்த ராஜினாமா கடிதம் சிறப்பு கவுன்சிலில், அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் கடந்த 8ம் தேதி முன்வைக்கப்பட்டது. இந்த கவுன்சில் மேயரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றது.

இந்த நிலையில், 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தி.மு.க சார்பில் கோவை மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, மேயரை தேர்வு செய்ய இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் ரங்கநாயகி போட்டியின்றி வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார். யார் இந்த ரங்கநாயகி விவரம் அறிய லிங்க்-ஐ சொடுக்கவும்
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe