பிஸ்னஸ் செய்யலாம் என கூறி கோடி கணக்கில் மோசடி...

published 6 months ago

பிஸ்னஸ் செய்யலாம் என கூறி கோடி கணக்கில் மோசடி...

கோவை: கோவை ரத்தினபுரி கண்ணப்பா நகர் காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் குமார்(42). இவர் அங்கு ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் இவர் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தார். அப்போது அவருக்கு சென்னையை சேர்ந்த யூசுப் சித்திக், காஜா மொய்தீன் ஆகியோரின் அறிமுகம் ஏற்பட்டது.
அப்போது இருவரும் சென்னையில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் பணம் கொடுத்தால் சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்து தருவார்கள். இதனால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கு என கூறினர். இதற்காக 5 கோடி பணம் வேண்டும் என்று கேட்டனர். 

அவர்களின் ஆசை வார்த்தையை நம்பிய குமார் அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ. 3.20 கோடி அனுப்பினார்.ஆனால் அதன் பிறகு அவர்கள் கூறியபடி பொருட்களை அனுப்பவில்லை. இது குறித்து கேட்டபோது, மேலும் ரூ. 1.80 கோடி பணம் கொடுத்தால் தான் சீனா நிறுவனத்திடம் பொருட்கள் வாங்க முடியும் என மழுப்பினர். நீண்ட நாட்கள் ஆகியும் சீனாவில் இருந்து எலக்டரானிக்ஸ் பொருட்களை வாங்கி தராமல் ரூ. 3.20 கோடியை மோசடி செய்து விட்டனர். 

இதனால் அவர்களுக்கிடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ரத்தினபுரி கண்ணப்பா நகரில் காந்திஜி ரோட்டில் குமார் காரில் இருந்தார். அப்போது அங்கு யூசுப் சித்திக், காஜா மொய்தீன், சயத் இப்ராஹிம், மதிர்அல்சூல் மற்றும் அர்ஷத் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் காருக்குள் ஏறி பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவதாக துப்பாக்கியை காட்டி குமாரை மிரட்டி சென்றனர். 

இது குறித்து குமார் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் யூசுப் சித்திக்ம் காஜா மொய்தீன், சயத் இப்ராஹிம், மதிர் அல்சூல், அர்ஷத் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe