கோவையில் ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கிய முன்னாள் மாணவர்கள்...

published 6 months ago

கோவையில் ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கிய முன்னாள் மாணவர்கள்...

கோவை: கோவையில் அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 19 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் வணங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

கோவை பேரூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலை பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணக்காரர் பஏழை என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். அப்படி  ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் இன்று ஒன்றாக சந்திக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இங்கு கல்வி பயின்று  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளிப் படிப்பினை முடித்து பிரிந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களின் தோழமைகளைச் சந்தித்த பெண்கள், ஆண்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்து ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்களின் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தங்களின் வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை கற்றுத் தந்த ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து கௌரவித்ததுடன் அவர்களின் காலில் நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொருவரும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் ஆசிரியர்களும் ஆனந்த கண்ணீர் விட்டனர்.தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பரிமாறி கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe