கோவையில் நாய் மீது காரை ஏற்றிய வாலிபர் மீது வழக்கு

published 6 months ago

கோவையில் நாய் மீது காரை ஏற்றிய வாலிபர் மீது வழக்கு

 

கோவை: கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் காமராஜர் தெருவில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி திரிகிறது.

இந்நிலையில், நேற்று அந்த வழியாக சென்ற கார் ஏறியதில் தெருவில் படுத்திருந்த நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து நவாவூர் பிரிவை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த செர்லி மேரி(45) என்பவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில், காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில் நாய் மீது காரை ஏற்றியது நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன்(29), என்பது தெரியவந்தது.

போலீசார் அவர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe