கோவையில் லிப்ட் கொடுத்தவரிடம் நகை, பைக் வழிப்பறி…

published 5 months ago

கோவையில் லிப்ட் கொடுத்தவரிடம் நகை, பைக் வழிப்பறி…

கோவை: கோவை உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல்லா(37). தச்சு தொழிலாளி. இவர் நேற்று இரவு அப்துல்லா வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் தெலுங்குபாளையம் வரை செல்வதற்கு பைக்கில் லிப்ட் கொடுக்கும்படி கேட்டார். உடனே அப்துல்லாவும் அவரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார். தெலுங்கு பாளையம் அருகே ஒரு வாட்டர் சர்வீஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென அந்த வாலிபர் அப்துல்லாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயின், செல்போன் மற்றும் பைக்கை பறித்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல்லா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களையும் அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு பைக்கில் தப்பி சென்று விட்டார்.
 

இதுகுறித்து அப்துல்லா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்லாவிடம் வழிப்பறி செய்த வாலிபரை தேடி வந்தனர். விசாரணையில், அந்த வாலிபர் செல்வபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி அப்துல் கலாம்(26) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe