கோவையில் கிருஷ்ண ஜெயந்தியில் இயங்கிய பள்ளி- கல்வி அலுவலரின் அதிரடி உத்தரவால் மாணவர்கள் உற்சாகம்...

published 5 months ago

கோவையில் கிருஷ்ண ஜெயந்தியில் இயங்கிய பள்ளி- கல்வி அலுவலரின் அதிரடி உத்தரவால் மாணவர்கள் உற்சாகம்...

கோவை: இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு  அரசு சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புளியகுளம் பகுதியில் இயங்கி வரும் வித்யா நிகேதன் என்ற CBSE பாடத்திட்ட பள்ளி இயங்கி உள்ளது. அங்கு பயிலும் LKG, UKG குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்ட நிலையில் அக்குழந்தைகள் வண்ண உடையில் கிருஷ்ணர் ராதை வேடம் பூண்டு வருகை புரிந்திருந்தனர். ஆனால்  இதர வகுப்பினர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றதாக தெரிகிறது. அதனால் அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி சீருடை பள்ளிக்கு இன்று வருகை புரிந்துள்ளனர்.

இது மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு சென்ற நிலையில் பள்ளிக்கு  விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மதியம் 12மணியுடன் விடுமுறை அளித்தது. கிருஷ்ண ஜெயந்தி யை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுக்காக பள்ளி வைக்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மதியத்துடன் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும்  பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில்   
மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

மதியமே பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe