மாடு மேய்க்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

published 1 week ago

மாடு மேய்க்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

கோவை: கோவை குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (55). தொழிலாளி. இவர் குனியமுத்தூர் ஜேஜே நகர் பின்புறம் செங்குளம் அருகே நேற்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி குளத்தில் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe