கோவையில் தமிழ்நாடு கேரள மாநில போலிசார் கலந்தாய்வு- எதற்காக தெரியுமா..?

published 5 hours ago

கோவையில் தமிழ்நாடு கேரள மாநில போலிசார் கலந்தாய்வு- எதற்காக தெரியுமா..?

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தகேயன் மற்றும் கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ப் தலைமையில்  கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் இளமுருகன் , அகலி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், உட்பட காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் பற்றிய  முன்கூட்டியே உளவுத்துறைகள் தகவல்கள் சேகரித்தல் மற்றும் பரிமாறிக்கொள்ளுதல், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல், போன்ற சட்டவிரோத செயல்களின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சேகரித்தல் பற்றியும்,எல்லை சோதனைச்சாவடிகள் மூலம் எல்லை தாண்டிய குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல் பற்றியும், 

இரு மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை கட்டுப்படுத்த இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கிணைப்பது பற்றியும்,எல்லைப் பகுதியில் நடைபெறும் குற்றங்களில் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும், எல்லை தாண்டி உள்ள NBW(non bailable warrant) கைதிகளை கைது செய்தல் பற்றியும், முக்கிய பிரமுகர்களின் வழிப்பாதுகாப்பு பற்றியும், இரு மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத போக்குவரத்து,மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல் பற்றியும்,
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட இரு மாநில காவல் அதிகாரிகளும் மாநிலங்களின் எல்லை தாண்டி செயல்பட உள்ள இடையூறுகளை இரு மாநில  காவல் கண்காணிப்பாளர்களிடம் எடுத்துரைத்தனர். இந்நிலையில் இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe