பேக்கரிக்குள் புகுந்து எண்ணெய் சட்டியில் கையை விட்டு ரகளை செய்தவர் உயிரிழப்பு…

published 1 day ago

பேக்கரிக்குள் புகுந்து எண்ணெய் சட்டியில் கையை விட்டு ரகளை செய்தவர் உயிரிழப்பு…

கோவை: கோவையில் நடுரோட்டில் பஸ்சை மறித்தும், பேக்கரிக்குள் புகுந்து எண்ணெய் சட்டியில் கையை விட்டு ரகளை செய்தவர் உயிரிழந்தார். அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

கோவை - திருச்சி ரோட்டில் நேற்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென அந்த வழியாக சென்ற பஸ்சை மறித்து ரகளை செய்தார். பின்னர் அவர் சாலையோரம் இருந்த குப்பை தொட்டியில் இருந்த உணவு கழிவுகளை எடுத்து சாப்பிட்டார். தொடர்ந்து அங்கிருந்த பேக்கரிக்குள் புகுந்த அவர் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட்டு ரகளையில் ஈடுபட்டார். 

இதனையடுத்து பேக்கரி ஊழியர்கள் அவரை வெளியே அனுப்பினர். சிறிது நேரம் கழித்து அதே நபர் பேக்கரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனை பார்த்த சிலர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சமபவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர் யார்? எப்படி இறந்தார்? மன நலம் பாதிக்கப்பட்டவரா? என்பன போன்ற விவரம் தெரியவரவில்லை. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe