1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்- ஒருவர் கைது…

published 3 days ago

1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்- ஒருவர் கைது…

கோவை: கோவையில் 1,100 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி இட்லி மாவாக அரைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சுரேஷ் (41) என்பவர் முறைகேடாக சேகரித்த ரேஷன் அரிசியை இட்லி மாவாக அரைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகள் என மொத்தம் 1,100 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி மற்றும் ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe