கார் டயர் வெடித்து ஐயப்ப பக்தர் பலி.. மூவர் படுகாயம்.. கோவிலுக்கு சென்ற போது சோகம்..!

published 2 years ago

கார் டயர் வெடித்து ஐயப்ப பக்தர் பலி.. மூவர் படுகாயம்.. கோவிலுக்கு சென்ற போது சோகம்..!

கோவை:கோவையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர், பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர்.பவானியில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை காரில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அவிநாசியை அடுத்தபழங்கரை பகுதியில் எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்து, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த கோவை பெரியநாயக்கன்பாளையம் அயோத்திநாயுடு வீதியைச்சேர்ந்த மோகன் (37) என்பவர் உயிரிழந்தார்.


கோவையை சேர்ந்தசுகில் (28), மீதுன் (16), ஜெயசூர்யா (18) ஆகியோர், அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். இது குறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.

கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://youtu.be/YoNfhv5ckJE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe