கோவையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி

published 1 year ago

கோவையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி

கோவை: கோவை தெற்கு உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவர் இஸ்ரத் அலி(34). இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புரூக்பீல்டு-தேவாங்கபேட்டை ரோடு ஜங்சனில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாலக்காட்டை சேர்ந்த நிசாந்த்(29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe