கோவையில் குடும்ப தகராறில் மனைவி,மாமியாருக்கு  அரிவாளால் வெட்டு 

published 1 year ago

கோவையில் குடும்ப தகராறில் மனைவி,மாமியாருக்கு  அரிவாளால் வெட்டு 

கோவை : கோவையில் குடும்ப தகராறில் மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிய பிளம்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கோவைப்புதூர் குளத்துப்பாளையம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(43). பிளம்பர். இவரது மனைவி விசாலாட்சி(34). இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதேபோல், நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விசாலாட்சியை அரிவாளால் வெட்ட முயன்றார். 

இதனைப் பார்த்த விசாலாட்சியின் தாயார் உமாராணி(55) மருமகனைத் தடுக்க முயன்றார். அப்போது விசாலாட்சி மற்றும் உமாராணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இருவருக்கும், கை, தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் விசாலாட்சி மற்றும் அவரது தாய் உமாராணியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். அதில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe