கோவையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

published 1 year ago

கோவையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கதிரவன்(49). சொந்த தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு கடை முன்பு பைக்கை நிறுத்தியிருந்தார். 

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்த போது 2 வாலிபர்கள் அவரது பைக்கை திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கதிரவன் உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 வாலிபர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

விசாரணையில், அவர்கள் போத்தனூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி துரைராஜ்(29), ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் 5வது வீதியைச் சேர்ந்த சரவணன்(54) என்பதும், இவர்கள் மீது திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், கோவை தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட்டை சேர்ந்தவர் சின்ராஜ்(26). இவர் நேற்று முன்தினம் இரவு உக்கடம் ராமசாமி தெருவில் பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது பைக்கை காணவில்லை. 

மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து அவர் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பைக் திருட்டில் ஈடுபட்டது விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் அரவிந்தன்(20), விக்னேஷ்(22) என்பது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe