கடைக்கு சென்ற கணவர் பலி.. மனைவி அதிர்ச்சி

published 1 year ago

கடைக்கு சென்ற கணவர் பலி.. மனைவி அதிர்ச்சி

கோவை: கோவை நீலிகோணாம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன்(48). இவர் பீளமேடு பூங்கா நகரில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்றார். ஆனால் இரவு நீண்டநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி திலகமணி(45), தனது உறவினர் ஒருவரை கடைக்கு சென்று பார்த்து வருமாறு அனுப்பினார். அங்கு அவர் சென்று பார்த்த போது ஆனந்தகிருஷ்ணன் கடைக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஆனந்தகிருஷ்ணனை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆனந்தகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் உடல் நலக் குறைவால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe