மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது- அண்ணாமலை...

published 1 year ago

மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது- அண்ணாமலை...

கோவை: மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தூய்மை பாரதம் என பிரதமர் சொல்லியதை தமிழக அரசு வேண்டாம் என கூறாமல் தமிழக அரசே இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்த வேண்டும்.மேலும் வரக்கூடிய பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். ஸ்வச் பாரத்தை பொறுத்தவரை வெறும் பேருக்கு தான் தமிழகத்தில் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தை தமிழக அரசு இந்திய அரசு திட்டம் என எடுத்து கொள்ள வேண்டுமே தவிர பாஜக திட்டம் என எடுத்து கொள்ள கூடாது. திமுக வின் சமூக வலைதளம் இருப்பதே பொய்களை பேசுவதற்காக தான். முதலில் டிஆர்பி ராஜா அதனை செய்து கொண்டிருந்தார், அமைச்சர் ஆன பிறகு அந்த பணியை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார். பாஜக வை பொறுத்தவரை இளைஞர்களின் aspirationsயை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இந்தியாவில் டாப் மோஸ்ட் அக்கவுண்ட்ஸை எடுத்து பார்த்தால் பாஜக வினருடையது தான் உள்ளது. சமூக வலைதளத்தில் திமுக குறித்து பேசியதற்காக பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். பாஜகவினர் கருத்து போட்டாலே திமுக அரசு பயந்து போய் பாஜக வினர் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். எனவே சமூக வலைதளத்தை பற்றி பேசுவதற்கு தமிழக முதல்வருக்கு எவ்வித அறுகதையும் இல்லை.

தேர்தல் கூட்டணி குறித்து என்னிடம் எந்த அறிக்கையையும் கேட்கவில்லை, நானும் கொடுக்கவில்லை. தற்போது பிரேக் உள்ளதால், அடுத்து வரக்கூடிய தலைவர்களின் நேரத்தை வாங்க வேண்டும், யோகி வருவதற்காக நேரத்தை வாங்க வேண்டும், பல்வேறு தலைவர்களின் நேரத்தை வாங்க வேண்டும். எனவே என்னிடம் யாரும் அறிக்கை கேட்கவில்லை, அறிக்கையையும் நான் கொடுக்க போவதில்லை, ஒரு பையுடன் சென்று வருகிறேன். தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளதால் தற்போது கட்சியை வலுபடுத்த வேண்டும். எதுவும் பின்னடைவு கிடையாது,

அரசியலை பொறுத்தவரை சில விசயங்கள் வர பிரசாதமாக அமையும். சிங்கப்பூர் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காமல் கழுத்தை பிடித்து மலேசிய வெளியில் தள்ளினார்கள், ஆனால் தற்போது சிங்கப்பூரின் ஜிடிபி என்ன என்று நாம் பார்க்க வேண்டும். எனக்கு களத்தின் தன்மை தெரிகிறது. 2024 தேர்தலில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது 25,000 பேரை தினமும் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியும் இவ்வளவு மக்களை தற்போது பார்ப்பது கிடையாது. 2024ல் நான் ஒரு நம்பரை சொல்லி இருக்கிறேன் அது வருதா இல்லையா என பாருங்கள். சில இடத்தில் குறி வைத்தால் அது தப்பாது. களத்தில் மக்களின் நிலை தெரிகிறது. மக்கள் எந்த பக்கம் சாய்கிறார்கள் என தெரிகிறது. 

57% தமிழக வாக்காளர்கள் 30 வயதிற்கு கீழ் உள்ளார்கள், அவர்கள் எல்லாம் சத்தியமாக டிவியை பார்ப்பதே இல்லை. Instagram யை தான் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியை பார்ப்பவர்கள் 4% தான். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை பார்ப்பது 2%. அவர்களின் நிலையை கருத்துக்கணிப்பு வைத்தால் தெரியாது. அது தனி உலகம் தனி குரூப். அதனை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் தொலைக்காட்சி பார்க்க வேண்டும், செய்திதாள்கள் படிக்க வேண்டும். 55% வாக்காளர்கள் வேறு உலகத்தில் வாழ்கிறார்கள். கூட்டணி பற்றி தேசிய தலைவர்கள் பேசுவார்கள். நான் தேர்தல் களம் எதை நோக்கி செல்கிறது என்பதில் தெளிவாக இருக்கிறேன். தற்போது அரசியல் விளையாட்டு இருப்பதே 57% வாக்காளர்கள் யார் இழுப்பது என்பது தான். எங்கள் அரசியல் அவர்களை சார்ந்தது.

பாஜக மாநில தலைவர் இடத்திற்கு போட்டி நடக்கிறதா என்ற கேள்விக்கு தயவு செய்து எடுத்து கொள்ளட்டும். மாநில தலைவர் பதிவி வெங்காயம் போன்று நான் ஏற்கனவே கூறியிருப்பேன். அரசியலில் பதவிக்காக வந்தவன் நான் கிடையாது. இதை விட அதிகமான பவரை பார்த்தவன் நான். எனக்கு என ஒரு குட்டி உலகம் உள்ளது. அதில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் மோடிக்காக அரசியலுக்கு வந்துள்ளேன், அவரை போன்ற ஒரு தலைவன் இந்தியாவிற்கு 100 ஆண்டுகளுக்கு கிடைக்க போவது கிடையாது. என்னை பொறுத்தவரை ஒரு கருத்தை கூறினால் அதில் உறுதியாக இருப்பேன். என்னை யாருக்காவும் மாற்றி கொள்ள மாட்டேன் எனக்காக வேண்டுமென்றால் சிலர் மாறலாம். சிபிஎம் பொது செயலாளர் பாலகிருஷ்ணனை பொறுத்தவரை அரசவையில் இருக்கும் புலவர் போன்றவர். மன்னை புகழ்ந்து பாடி கொண்டே இருந்தால் பொற்காசுகள் கிடைக்கும். இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை அரசவை புலவர்கல் போல் உள்ளது. பாலகிருஷ்ணன் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கரும்புள்ளி. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் கரும்புள்ளி. கோவை எம்பி மூன்று நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கோவை எம்பி. என் மண் என் மக்கள் வந்த பிறகு கோவைக்குள் எட்டி பார்க்கிறார். கம்யூனிஸ்ட் என்றாலே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் தான். இவர்களுக்கு வெட்கம் இருந்தால் மம்தா வுடன் கூட்டணி வைத்து இருப்பார்களா?. திமுக அரசை புகழ்ந்து பேச வேண்டும் என்பது எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் சாபக்கேடு.

அதிமுக வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் அவர்களுக்கு உள்ளேயே மாறி மாறி பேசுக்கொள்கிறார்கள்,இதில் விவசாயியான நான் என்ன சொல்ல வேண்டி உள்ளது. பாஜக தவறான பாதையில் செல்கிறது என தமிழகத்தில் ஊடகங்களோ, அரசியல்வாதிகளோ கூறினால் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பாஜக எடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைவருக்குமே பாஜக மீது கோபமும் வெறுப்பும் உள்ளது தானே. தமிழக பாஜகவிற்கு ஒரே ஒரு தேர்தல் தான் தேவைப்படுகிறது, 25% தாண்டி விட்டோம் என காண்பித்து விட்டால் தமிழக அரசியல் தலைகீழாக மாறும்.

அதிமுக ஊழல பட்டியல் வெளியிடுவது குறித்தான கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மாநில தலைவர் பதவி இல்லை என்றால் தொடர்ந்து கட்சியில் செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, கேள்விக்கு ஒரு மரபு உள்ளது, அந்த மரபை தாண்டி விட்டால் அண்ணாமலை யாராக இருந்தாலும் விட மாட்டேன் என பதிலளித்தார். நான் ஏன் முழு நேர அரசியல் வாதியாக இருக்க வேண்டும் ஊழல் செய்வதற்கா?... விவசாயி என்பது என்னுடைய அடையாளம், அதன்பிறகு தான் அரசியல்வாதி என்ற அடையாளம் எனக்கு. பிறகு தான் பிஜேபி என்ற அடையாளம்.

என்ன கேள்வி கேட்டாலும் Defence பண்ன் வேண்டும் என்றால் எதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டும். நீங்கள் என்னை கேள்வி கேட்டால் உங்களையும் கேள்வி கேட்கும் உரிமை எனக்கும் உள்ளது தானே... கேள்வி கேட்கும் போது லட்மணரேகையை தாண்ட கூடாது. நில அபகரிப்பு விவகாரத்தில் பாஜக  மாவட்ட தலைவர் இருப்பது குறித்தான கேள்விக்கு அதற்கு அவரே பதிலளிப்பார் என்றார்.

என்னிடம் எடுக்குமடக்காக கேள்வி கேட்டு எதற்காக உங்கள் டிஆர்பி யை ஏற்றுகிறீர்கள். வேலையே செய்யாமல் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் டிஆர்பியை ஏற்ற வேண்டும் என எண்ணினால் எப்படி. என்னை எதிர்ப்பது தான் என்னுடைய வளர்ச்சிக்கான காரணம் என தெரிவித்தார்.

பேரறிஞர் அண்னா குறித்து பேசியது குறித்து தலைமை என்னிடம் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை. பாஜக தனித்து போட்டியிடும் என்பதற்குள் நான் செல்லவில்லை, NDA கூட்டணியில் எத்தனையோ கட்சிகள் உள்ளது, இக்கூட்டணிக்கான காலமும் நேரமும் வரும் போது தலைமை தலைவர்கள் பேசுவார்கள் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe