கோவில் சுற்றுச்சூரை இடிக்க முயற்சிக்கும் முன்னாள் நிர்வாகிகள்- பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

published 1 year ago

கோவில் சுற்றுச்சூரை இடிக்க முயற்சிக்கும் முன்னாள் நிர்வாகிகள்- பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கோவை: கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீராம் நகரில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் 1999க்கும் பிறகு இட மனைகளாக பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த கோவிலை அந்த ஊர் மக்களே சேர்ந்து நடத்தி வரும் நிலையில் அக்கோவிலில் செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்த சிலர் பொது மக்களிடம் வசூலித்த பணத்தை முறையாக காண்பிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  

இதனால் அவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தற்பொழுது அந்த நபர்கள் கோவிலின் சுற்றுசுவரை இடிக்க முயல்வதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருத்தங்கள் ஏற்படுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe