ரேஸ்கோர்சில் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்க மறுத்த ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

published 1 year ago

ரேஸ்கோர்சில் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்க மறுத்த ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

கோவை:  புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஓட்டலுக்குள் அனுமதி மறுத்த ஊழியர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி களைகட்டியது. அப்போது இரவு 12 மணியளவில் சில வாலிபர்கள் கும்பலாக வந்தனர்.

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 12 மணிக்கு பிறகு ஓட்டலுக்குள் செல்ல அனுமதி இல்லை என கூறி அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஓட்டல் ஊழியர் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதனால் ஓட்டல் முன்பு கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து ஓட்டல் மேலாளர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிவபிரசாத்(30) உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe