கணபதியில் பைனான்சியரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதி- வழக்கில் மேலும் ஒருவர் சேர்ப்பு...

published 1 year ago

கணபதியில் பைனான்சியரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதி- வழக்கில் மேலும் ஒருவர் சேர்ப்பு...

கோவை கோவையில் பைனான்சியரிடம் ரூ. 5 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மேலும் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை கணபதி கோபால்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(57). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் காளப்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் சரவணன் என்பவர் கடந்த 2019, 20ம் ஆண்டில் 5 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிக்காக செந்தில்குமாரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது. அந்த பணத்தை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்தி விடுவதாக சரவணன் தெரிவித்துள்ளார். ஆனால் கோவிட் காரணமாக அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதற்கிடையே செந்தில்குமாருக்கு, சரவணன் ரூ. 90 லட்சத்துக்கு காசோலை கொடுத்ததாகவும், அதனை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியதாகவும் தெரிகிறது. 

இந்நிலையில், செந்தில்குமார் சரவணம்பட்டி காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு கல்யாண மண்டபம் அருகே சரவணனை சந்தித்து தன்னிடம் வாங்கிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அப்போது சரவணன் மற்றும் அங்கிருந்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசி செந்தில்குமாரை மிரட்டி உள்ளனர். இது குறித்து பைனான்சியர் செந்தில்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சரவணன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக சரவணனின் மனைவி கல்பனா மற்றும் ரவீந்திரநாத் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 13ம் தேதி சரவணன், கல்பனா மீது பீளமேடு போலீசார் இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe