ஆன்லைனில் வேலை.. வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்... ரூ.30 லட்சம் அபேஸ்!

published 1 year ago

ஆன்லைனில் வேலை.. வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்... ரூ.30 லட்சம் அபேஸ்!

கோவை: ஆன்லைன் வேலை என கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 30 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(53). தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், நீங்கள் ஆன்லைனில் முதலீடு செய்து நாங்கள் கொடுக்கும் டாஸ்க்கை முடித்து கொடுத்தால் கமிஷன் தருவதாக தெரிவித்தார்.

அவரது ஆசைவார்த்தையை நம்பிய சுப்பிரமணியன் அந்த நபரின் வங்கி கணக்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ. 30 லட்சம் அனுப்பினார். ஆனால் பணம் அனுப்பிய பின்னரும், அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை.

இதனால் சுப்பிரமணியன் மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டபோது ரூ. 12 லட்சத்து 19 ஆயிரம் அனுப்பினால் மட்டுமே கமிஷன் தொகையுடன் நீங்கள் அனுப்பிய மொத்த பணத்தையும் எடுக்க முடியும் என தெரிவித்தார்.

அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மொத்தமாக ஆன்லைன் வேலை என கூறி ரூ. 30 லட்சத்தை மோசடி செய்து விட்டனர்.

இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe