கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை...

published 2 weeks ago

கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HlkOvdLTXuH2GsGJ47fe0D

கோவை: சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணிபுரிபவர் கணபதி மாநகர் பகுதியை சேர்ந்த பாலகுமார்(38). 
இவரது மனைவி தனியர் நட்சத்திர குழும ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார், அவர் பதவி உயர்வு பெற்று 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்றுள்ளார்.

அதனால், தனது இரண்டு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். பாலகுமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பணியில் கலந்து கொண்ட அவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி காலை வீட்டிற்கு திரும்பினார். 


சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் அவரது பெற்றோரும் அவரை அணுக முடியவில்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டனர். அதனை தொடர்ந்து போலீஸார் நேற்றுஇரவு வீட்டிற்கு விரைந்தனர். அப்போது பாலகுமார் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்துள்ளனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw