குனியமுத்தூரில் பஸ்ஸில் பெண்ணிடம் நகை பறிப்பு!

published 1 week ago

குனியமுத்தூரில் பஸ்ஸில் பெண்ணிடம் நகை பறிப்பு!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் மரகதம் (55). இவர் நேற்று பஸ்சில் தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வழிபட சென்றார்.

பின்னர் அங்கிருந்து பஸ்சில் மரப்பாலம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த மரகதம் மற்றொரு பஸ்சில் ஏறி தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.


அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் யாரோ? அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த மரகதம் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw