கோவையில் செல்போன் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து…

published 9 months ago

கோவையில் செல்போன் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து…

கோவை: கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். 

இவர் நேற்று கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சிங்காநல்லூர் அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த 2 பேர் தினேசை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில், ஒருவர் கத்தியால் தினேசை குத்தினார். இதை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்தனர். 

இதைப்பார்த்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். கத்திக்குத்தில் காயமடைந்த தினேஷ், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe