கோவையில் காளானுடன், பீர் அருந்தியவர் பரிதாப சாவு!

published 9 months ago

கோவையில் காளானுடன், பீர் அருந்தியவர் பரிதாப சாவு!

கோவை: கோவையில் காளான் சாப்பிட்டு பீர் அருந்திய வாலிபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சதீஷ்(21). டிப்ளமோ படித்துள்ள இவர் கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் காளியம்மாள் காலனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவருடன் நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவதினேஷ் என்பவரும் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற சதீஷ், பீர் வாங்கி அருந்தினார்.

அப்போது அவர் சைட் டிஸ்சாக காளான் ப்ரை சாப்பிட்டார். சிறிது நேரம் கழித்து கழிவறை சென்று திரும்பிய சதீஷ் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சரிந்தார்.

இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த சிவ தினேஷ் உடனே தனியார் நிறுவன சூப்பர்வைசருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சதீசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவர் பீருடன் காளான் ப்ரை சாப்பிட்டபோது புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானாரா? அல்லது அவருக்கு வேறு ஏதேனும் உடல் நலப்பாதிப்பு இருந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளானுடன் பீர் அருந்திய வாலிபர் பலியான சம்பவம் அவரது நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe