உலக யோகா தினம்-கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் கடைப்பிடிப்பு…

published 8 months ago

உலக யோகா தினம்-கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் கடைப்பிடிப்பு…

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவல்துறை அதிகாரிகள்,ஆய்வாளர்கள், காவலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இந்த யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

காவலர்கள் அனைவரும் ஒரு மணி நேரமாக கை பயிற்சி,மூச்சு பயிற்சி, கண் பயிற்சி,சூரிய நமஸ்காரம், மற்றும் ஆசனங்கள்,முத்திரைகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமும் யோகா பயிற்சியில் செய்தால் மன அழுத்தம் இன்றி ஆரோக்கியமாக வாழலாம் என்றும் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு யோகா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் நாடு முழுவதும் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe