கோவையில் வாலிபர் தற்கொலை

published 1 year ago

கோவையில் வாலிபர் தற்கொலை

கோவை: கோவை நம்பர் 4 வீரபாண்டியை அடுத்த ஆர்.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாரதி (வயது 24). இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார். 

சம்பவத்தன்று அருண்பாரதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது வீட்டிற்கு சென்று வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும், வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe