ஒண்டிப்புதூர் அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற பெண் கைது

published 1 year ago

ஒண்டிப்புதூர் அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற பெண் கைது

கோவை: கோவை ஒண்டிப்புதூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஜெயலட்சுமி(24). 

தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு சாவியை வழக்கமாக வீட்டுக்கு வெளியே வைத்து விட்டு சென்றார். 

அப்போது சாவியை எடுத்து கதவை திறந்து நைசாக உள்ளே புகுந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்த பொருட்களை திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். 

இதனை பார்த்த பக்கத்து வீட்டு காரர்கள் இது குறித்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஜெயலட்சுமியிடம் தெரிவித்தனர். 

மேலும் அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த சிங்கமுத்து மனைவி தேவி(43) என்பது தெரியவந்தது. 

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe