கோவையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை…

published 1 year ago

கோவையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை…

கோவை: கோவையில் அழுகிய நிலையில் வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கோவை உக்கடம் பழைய டோபி காலனியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நேற்று உயிரிழந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உக்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் கிடந்த அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe