மருதமலை அருகே பெட்டிக்கடை பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது…

published 1 year ago

மருதமலை அருகே பெட்டிக்கடை பெண்ணிடம் பணம் பறித்த வாலிபர் கைது…

கோவை: கோவை மருதமலை அடிவாரம் அண்ணாநகரை சேர்ந்தவர் பசலையம்மாள்(32). இவர் அரசு சட்டக்கல்லூரி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பசலையம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டினார். 

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.300 ஐ பறித்து தப்பினார். இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கத்தி முனையில் பணம் பறித்தது மருதமலை அடிவாரம் அமர்ஜோதி காலனியை சேர்ந்த விஜய்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe