மனைவியை பிரிந்த மன உளைச்சலில் கோவையில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை!

published 2 weeks ago

மனைவியை பிரிந்த மன உளைச்சலில் கோவையில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/J30Hw99ftHR2wHiYb8sllV

கோவை: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரை சேர்ந்தவர் சக்ரபாணி(38). கல்லூரி பேராசிரியர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தவர்.

இவர் கோவை பீளமேடு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக வீடு எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டார்.


பின்னர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த ஒரு மாதத்துக்கு பின் மீண்டும் கோவை வந்த அவர் வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சக்ரபாணி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw