கோவையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்- 4 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு…

published 3 days ago

கோவையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்-  4 நாட்கள் கழித்து சடலமாக மீட்பு…

கோவை: கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவருக்கு திருமணம் ஆகாத  திவிரக்தியில் குடி போதைக்கு அடிமையாகி மன உளைச்சலுடன் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி அன்று மாலை தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்ததாக அருகில் உள்ள நபர்கள் கூறியதால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக தீவிரமாக உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்ததால் மீண்டும் தூத்துக்குடியில் உள்ள கூபா டைவிங் என அழைக்கப்படும் ஆழ்கடலில் முத்து எடுக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று கோவை வந்தடைந்தனர்.

பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக உடலை மீட்டு கினற்றிற்கு மேலே கொண்டு வந்து உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் நான்கு நாட்களாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe