திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

published 2 years ago

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

 

கோவை: தீபாவளி பண்டிகைக்கால கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06056), வரும் 25-ந்தேதி இயக்கப்படுகிறது.

இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையிலான சிறப்பு ரயில் (06055), சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 26-ந் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், ஆலூவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் 7 ஏ.சி.பெட்டிகளும், படுக்கை வசதி கொண்ட பெட்டி 6-ம், முன்பதிவு இல்லாத இருக்கை வசதி பெட்டி 2-ம் இனைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் கோவைக்கு காலை 4.12 மணிக்கு வந்து 4.15-க்கு புறப்பட்டு செல்லும். சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையிலான சிறப்பு ரயில் கோவைக்கு இரவு 11.03-க்கு வந்து 11.05-க்கு புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe