கோவையில் மூதாட்டியிடம் பவுன் நகையை பறித்து சென்ற பைக் ஆசாமி...

published 1 year ago

கோவையில் மூதாட்டியிடம் பவுன் நகையை பறித்து சென்ற பைக் ஆசாமி...

கோவை: கோவையில் மூதாட்டியிடம் பவுன் நகையை பறித்து சென்ற பைக் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
 

கோவை குனியமுத்தூர் அய்யப்பா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தா(64). இவர் நேற்று குனியமுத்தூர் குமரன் கார்டன் பகுதியில் தனது கணவர் மற்றும் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 5 3/4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தா குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை பறித்து தப்பிய பைக் ஆசாமியை தேடி வருகின்றனர். 

குனியமுத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த 3வது நகை பறிப்பு சம்பவம் இது ஆகும். எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து நகை பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் நகை பறிப்பு சம்பவம் குனியமுத்தூர் பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe