கோவையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

published 2 weeks ago

கோவையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மனைவி சரண்யா(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனது கணவரை பிரிந்து செல்வபுரம் ஐயூடிபி காலனியில் உள்ள தனது சகோரர் வீட்டில் வசித்து வந்தார். கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், போதிய வருமானம் இல்லாததால் சரண்யா குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். 


இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw